சிரேஷ்ட பிரஜைகளுக்காக கவர்ச்சியான வட்டி வீதங்களுடன் விசேட நிலையான வைப்புக் கணக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புத் திட்டம் - 2025
உற்பத்தி பொதுநோக்கு
சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புத் திட்டம் 2025 ஆனது 69 வயதிற்கு மேற்பட்ட தனிநபரான சிரேஷ்ட பிரஜைகளுக்கு வளப்படுத்தப்பட்ட வருமானம் மற்றும் நிதி பாதுகாப்பினை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டதாகும். இவ்வரையறுக்கப்பட்ட காலப்பகுதி திட்டமானது சிரேஷ்ட பிரஜைகளது தேவைக்களுக்கென தனித்துவமானதாக கவர்ச்சிகரமான வட்டி வீதங்களை வழங்குகின்றது.
தகுதிநிலைகள்
· வைப்புக் கணக்கு ஆரம்பிக்கும் தினத்தில் 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய வதிவிட இலங்கை பிரஜையாகவிருத்தல்
· உறுதிப்படுத்தலுக்கு தேசிய அடையாள அட்டை கட்டாயமானதாகும்.
· இத்திட்டத்திற்கு தகுதியடைய வைப்பு உடைமையாளர் தன்னுடைய மாதாந்த வருமானமானது மாதத்திற்கு ரூபா. 150>000 குறைவானது என்பதனை வெளிப்படுத்த வேண்டும்.
திட்ட காலப்பகுதி
01 ஜுலை 2025 தொடக்கம் 31 டிசெம்பர் 2025 வரையில்
வைப்பு வகை மற்றும் காலப்பகுதி
12 மாத நிலையான வைப்பு – வட்டி மாதாந்தம் செலுத்தப்படும் (வட்டி மாதாந்தம் மீளப்பெறப்படுதல் வேண்டும் என்பதுடன் தன்னியக்கமாக புதுப்பிக்கப்படல் அனுமதிக்கபடமாட்டாது)
வட்டி வீதம்
சராசரி நிறையேற்றப்பட்ட நிலையான வைப்பு வீதம் (AWFDR) + ஆண்டுக்கு 3% அல்லது வங்கிப் பத்திர வீதம் + 3%, இரண்டில் அதிகமான ஒன்று
வைப்பாளரொருவருக்கான அதிகூடிய மாதாந்த வைப்பு கணக்கு
அனைத்து பங்குபெறுநர் வங்கிகள் முழுமையிலும் வைப்பாளரொருவருக்கு அதிகூடியதாக ரூ.1 மில்லியன் (மொத்த வைப்பு பெறுமதி).
கூட்டு வைப்புகள்
இரு வைப்பாளர்களும் சிரேஷ்ட பிரஜைகளாக காணப்பட்டால் மாத்திரமே அனுமதிக்கப்படும். (முதன்மை வைப்பு உரிமையாளர் அதிகூடியதாக ரூ.1 மில்லியனை பேணுவதற்கு அனுமதிக்கப்படுகின்றார்.)
முதிர்வுக்கு முன்னரான மீளப்பெறல்கள்
அனுமதிக்கப்படுகின்றது. தண்ட வட்டி இத்திட்டத்தின் மீது ஏற்புடையதாதலாகாது என்பதுடன் வங்கியானது வைப்பு ஒப்புக்கொள்ளப்பட்ட வட்டி வீதத்தில் பேணப்பட்டிருந்த காலப்பகுதிக்காக வட்டி செலுத்தப்படுதல் வேண்டும்.